அபூ பஷீர் அல்-அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய பயணங்களில் ஒன்றில் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தூதரை அனுப்பினார்கள். – "மக்கள் தங்கள் தங்குமிடங்களில் இருந்தபோது (இந்த அறிவிப்பைச் செய்யுமாறு) அவர் கூறியதாக நான் கருதுகிறேன்" என அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் கூறுகிறார் – (அந்த அறிவிப்பு யாதெனில்:) "எந்த ஓர் ஒட்டகத்தின் கழுத்திலும் வில் நாண் (வத்ர்) மாலையோ அல்லது (வேறு எந்த) மாலையோ துண்டிக்கப்படாமல் இருக்கக் கூடாது." இமாம் மாலிக் (ரஹ்) கூறினார்கள்: "(இது) கண் திருஷ்டியின் காரணமாகவே (தடை செய்யப்பட்டதாக) நான் கருதுகிறேன்."