அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தன் உறவினரானாலும் சரி, அல்லது உறவினர் அல்லாதவரானாலும் சரி, ஓர் அனாதையைப் பராமரிப்பவரும் நானும் சொர்க்கத்தில் இதோ இவ்விரண்டைப் போன்று இருப்போம்.” (இதை அறிவித்த) மாலிக் (ரஹ்) அவர்கள் தமது ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் சுட்டிக்காட்டினார்கள்.
சஹ்ல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், "நானும், ஓர் அநாதையின் பொறுப்பை ஏற்றுக்கொள்பவரும் சொர்க்கத்தில் இவ்வாறு (நெருக்கமாக) இருப்போம்" என்று கூறி, தமது நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்துக் காட்டினார்கள்.
சஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இவ்விரு விரல்களைப் போல இருப்போம்." மேலும், அவர்கள் தம்முடைய சுட்டுவிரலையும் நடுவிரலையும் சுட்டிக்காட்டினார்கள்.