حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاكِبُ شَيْطَانٌ وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ وَالثَّلاَثَةُ رَكْبٌ .
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனித்த பயணி ஒரு ஷைத்தான், இரு பயணிகள் இரு ஷைத்தான்கள், ஆனால் மூவர் ஒரு பயணக் குழுவினர் ஆவர்.
அம்ர் பின் ஷுஐப் அவர்கள், தம் தந்தையிடமிருந்தும், தம் பாட்டனாரிடமிருந்தும் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தனியாகப் பயணிப்பவர் ஒரு ஷைத்தான் ஆவார்; இரு பயணிகள் இரு ஷைத்தான்கள் ஆவார்கள். மூவர் (சேர்ந்தால் அது) ஒரு பயணக் குழுவாகும்."
அபூ ஈஸா கூறினார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸ் ‘ஹஸன் ஸஹீஹ்’ ஆகும். ஆஸிம் என்பவரின் வழியாகவே தவிர வேறு வழியில் நாம் இதை அறியவில்லை. இவர் முஹம்மத் பின் ஸைத் பின் அப்துல்லாஹ் பின் உமர் ஆவார். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் ஹதீஸ் ‘ஹஸன்’ எனும் தரத்தையுடையதாகும்.
முஹம்மத் அவர்கள் கூறினார்கள்: "இவர் நம்பிக்கைக்குரியவர்; உண்மையாளர். மேலும் ஆஸிம் பின் உமர் அல்-உமரீ என்பவர் ஹதீஸில் பலவீனமானவர் ஆவார்; அவரிடமிருந்து நான் எதையும் அறிவிப்பதில்லை."