حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ فَيَحْتَطِبَ عَلَى ظَهْرِهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْتِيَ رَجُلاً، فَيَسْأَلَهُ، أَعْطَاهُ أَوْ مَنَعَهُ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக்கொண்டு, விறகுகளைச் சேகரித்துத் தம் முதுகில் சுமந்து வருவது, ஒருவரிடம் சென்று யாசிப்பதை விடச் சிறந்ததாகும்; அவர் இவருக்குக் கொடுத்தாலும் சரி, அல்லது கொடுக்க மறுத்தாலும் சரி."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன் முதுகில் விறகுகளைச் சேகரிப்பது, வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து வழங்கிய ஒரு மனிதனிடம் வந்து அவனிடம் (உதவி) கேட்பதை விட அவருக்குச் சிறந்ததாகும். அவன் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்."