ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரியின் மகன் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்) கூறினார்கள்:
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (உர்வா, உமது தந்தை ஸுபைர், உமது தாய்வழிப் பாட்டனார் அபூபக்ர் ஆகிய) உமது இரு தந்தையரும் 'தங்களுக்குக் காயம் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பதிலளித்தவர்கள்' (எனும் 3:172ஆவது குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டவர்கள்) ஆவர்."
உர்வா அறிவித்தார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: "உங்களின் தந்தையர்களான (ஸுபைர் (ரலி) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும்), தங்களுக்குக் காயம் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பதிலளித்தவர்களில் (அதாவது, உஹதுப் போரில் ஏற்பட்ட காயங்களுக்குப் பிறகும், ஹம்ரா அல்-அஸத் போருக்காக அழைக்கப்பட்டபோது பதிலளித்தவர்களில்) உள்ளவர்கள் ஆவார்கள்."