ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"யார் பூமியில் நடமாடும் ஒரு ஷஹீதைப் (இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவரைப்) பார்த்து மகிழ்ச்சியடைய விரும்புகிறாரோ, அவர் தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்களைப் பார்க்கட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.
(இமாம் அபூஈஸா அத்திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இது 'கரீப்' எனும் தரத்திலுள்ள ஹதீஸாகும். ஸல்த் என்பவரின் அறிவிப்பைத் தவிர வேறு வழியில் இதை நாம் அறியமாட்டோம். மேலும், ஸல்த் பின் தீனார் மற்றும் ஸாலிஹ் பின் மூஸா ஆகியோரின் மனனத் திறன் குறித்து சில அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.)