ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு பெண், "மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் தூய்மையான பிறகு (விடுபட்ட) தொழுகைகளை நிறைவேற்ற வேண்டுமா?" என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், "நீ ஹரூரிய்யா (பிரிவைச் சேர்ந்தவளா)? நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மாதவிடாய் அடைவோம்; பின்னர் தூய்மையடைவோம். (அப்போது விடுபட்ட) நோன்புகளை நிறைவேற்றுமாறு அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். ஆனால், (விடுபட்ட) தொழுகைகளை நிறைவேற்றுமாறு எங்களுக்குக் கட்டளையிட மாட்டார்கள்" என்று கூறினார்கள்.