ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவர், தம் அடிமையை (தமது மரணத்திற்குப் பின் விடுதலை செய்வதாக) அறிவித்தார். அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் இருக்கவில்லை. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அடிமையை விற்றுவிட்டார்கள். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரை இப்னு அந்நஹ்ஹாம் (ரலி) அவர்கள் வாங்கினார்கள். அவர் ஒரு கிப்தி (எகிப்திய) அடிமையாவார்; அவர் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களின் ஆட்சியின் முதல் ஆண்டில் இறந்துவிட்டார்.