حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، وَزَيْدِ بْنِ أَسْلَمَ، يُخْبِرُونَهُ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ .
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எவன் கர்வத்தினால் தன் ஆடையை (தரையில் படும்படி) இழுத்துச் செல்கிறானோ, அவனை அல்லாஹ் (கருணையுடன்) பார்க்க மாட்டான்.’
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பெருமையின் காரணமாகத் தனது ஆடையைத் (தரையில் படுமாறு) இழுத்துச் செல்பவனை அல்லாஹ் (கருணையுடன்) பார்க்க மாட்டான்.'
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் பெருமையினால் தனது (கீழ்) ஆடையை இழுத்துச் செல்கிறானோ, மறுமை நாளில் அல்லாஹ் அவனைப் பார்க்க மாட்டான்.
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَنْظَلَةُ، قَالَ سَمِعْتُ سَالِمًا، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ جَرَّ ثَوْبَهُ مِنَ الْخُيَلاَءِ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ
الْقِيَامَةِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: யார் பெருமையினால் தனது ஆடையை (தரையில் படுமாறு) இழுத்துச் சென்றாரோ, அவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.