அபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள்: '(ஒரு பயணத்தின்போது) தாங்கள் உறங்கித் தொழுகையைத் தவறவிட்டதைப் பற்றி (சஹாபாக்கள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உறக்கத்தில் (ஏற்படுவது) அலட்சியம் ஆகாது. அலட்சியம் என்பது விழித்திருக்கும்போதுதான் (ஏற்படும்). உங்களில் எவரேனும் ஒரு தொழுகையை மறந்தால் அல்லது அதைத் தவறவிட்டு உறங்கினால், அவருக்கு நினைவு வரும்போது அதை அவர் தொழுதுகொள்ளட்டும்.'