சஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் முஅத்தின் சொல்வதைக் கேட்கும் போது, 'அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரழித்து பில்லாஹி ரப்பன், வ பில் இஸ்லாமி தீனன், வ பி முஹம்மதின் ரசூலா (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்றும், மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்; அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களைத் தூதராகவும் நான் பொருந்திக் கொண்டேன்)' என்று கூறுகிறாரோ, அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்."