حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، أَيْنَمَا تَوَجَّهَتْ يُومِئُ. وَذَكَرَ عَبْدُ اللَّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُهُ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பயணத்தின்போது, தமது வாகனம் எந்தத் திசையை நோக்கிச் சென்றாலும் அதன்மீது (அமர்ந்தவாறு ருகூஃ, ஸுஜூதுகளைச்) சைகை செய்து தொழுவார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்து வந்தார்கள் என்று அப்துல்லாஹ் (பின் உமர் - ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது வாகனம் எத்திசையை முன்னோக்கிச் சென்றாலும் அதன் மீது (நஃபிலான தொழுகைகளை) தொழுவார்கள்.
அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள், "இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள்" என்று கூறினார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும்போது, தமது வாகனத்தின் மீது (நஃபில் தொழுகைகளை) தொழுவார்கள்; அது எந்தத் திசையை முன்னோக்கிச் சென்றாலும் சரியே." மாலிக் அவர்கள் கூறினார்கள்: "அப்துல்லாஹ் பின் தீனார் அவர்கள் கூறினார்கள்: 'இப்னு உமர் (ரழி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள்.'"
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் செய்யும்போது தங்களின் வாகனத்தின் மீது, அது எந்தத் திசையை நோக்கிச் சென்றாலும் அந்தத் திசையை நோக்கியவாறு (நஃபில் தொழுகைகளை) தொழுவார்கள். மாலிக் அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு தீனார் அவர்கள், இப்னு உமர் (ரழி) அவர்களும் அவ்வாறே செய்து வந்தார்கள் என்று கூறினார்கள்.