நாஃபி அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் (இப்னு உமர்) (ரழி) அவர்கள் ஜும்ஆத் தொழுகையைத் தொழுது முடித்ததும் (பள்ளியிலிருந்து) திரும்பிச் சென்று, தம் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வார்கள்' என்று கூறினார்கள்.