அப்துல்லாஹ் பின் யஸார் கூறினார்: 'நான் சுலைமான் பின் ஸுரத் மற்றும் காலித் பின் உர்ஃபதா ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அவர்கள், வயிற்று நோயின் காரணமாக ஒரு மனிதர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். அவர்கள் இருவரும் (வயிற்று நோயால் இறந்தவர் ஷஹீதாகக் கருதப்படுவதால்) அவருடைய ஜனாஸாவில் கலந்துகொள்ள விரும்பினார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரிடம், 'வயிற்று நோயால் கொல்லப்படுபவர், தனது கப்ரில் தண்டிக்கப்பட மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு மற்றவர், 'ஆம்' என்றார்கள்.'