அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஜிஹாதில் கலந்துகொள்ள அனுமதி கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உன் பெற்றோர் உயிருடன் இருக்கின்றனரா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், அவ்விருவரிடமும் (பணிவிடை செய்வதில்) நீர் பாடுபடுவீராக!" என்று கூறினார்கள்.