حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ". ثَلاَثًا. قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ " الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ ". وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا فَقَالَ " أَلاَ وَقَوْلُ الزُّورِ ". قَالَ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ. وَقَالَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا الْجُرَيْرِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ.
அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரியவற்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று மூன்று முறை கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோருக்கு மாறு செய்வதும்" என்று கூறினார்கள். பிறகு (சாய்ந்து கொண்டிருந்த) அவர்கள் எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள்! பொய் பேசுவதும், பொய்ச் சாட்சி சொல்வதும்" என்று கூறினார்கள். "அவர் மௌனமாகி விடக் கூடாதா?" என்று நாங்கள் கூறுமளவுக்கு, அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.
حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ الْوَاسِطِيُّ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ". قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ " الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ ". وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ فَقَالَ " أَلاَ وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ، أَلاَ وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ ". فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى قُلْتُ لاَ يَسْكُتُ.
அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரிய பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினோம். அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது; பெற்றோர்க்கு மாறு செய்வது" என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் (எழுந்து) அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள்! புனைந்துரைப்பதும், பொய் சாட்சியம் கூறுவதும் (பெரும் பாவங்களாகும்). அறிந்து கொள்ளுங்கள்! புனைந்துரைப்பதும், பொய் சாட்சியம் கூறுவதும் (பெரும் பாவங்களாகும்)" என்று கூறினார்கள். 'அவர்கள் மௌனமாக மாட்டார்களா?' என்று நான் (எனக்குள்) கூறும் அளவிற்கு, அவர்கள் அதைத் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார்கள்.