அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் இரண்டு பெண் பிள்ளைகளை அவர்கள் பருவ வயதை அடையும் வரை பராமரிக்கிறாரோ, நானும் அவரும் சொர்க்கத்தில் இந்த இரண்டையும் போன்று நுழைவோம்." மேலும் (இதை அறிவித்த) முஹம்மத் (என்பவர்), தமது ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சுட்டிக்காட்டினார்.