அபூ மஸ்ஊத் அல்-பத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் எனது அடிமையைச் சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தபோது, எனக்குப் பின்னாலிருந்து, "அபூ மஸ்ஊத்! அறிந்துகொள்!" என்று ஒரு குரலைக் கேட்டேன். ஆனால் (கடுமையான) கோபத்தின் காரணமாக அந்தக் குரலை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் என்னை நெருங்கியபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்பதைக் கண்டேன். அவர்கள், "அபூ மஸ்ஊத்! அறிந்துகொள்! அபூ மஸ்ஊத்! அறிந்துகொள்!" என்று கூறிக் கொண்டிருந்தார்கள். உடனே நான் என் கையிலிருந்த சாட்டையை (கீழே) எறிந்தேன். அப்போது அவர்கள், "அபூ மஸ்ஊத்! அறிந்துகொள்! நிச்சயமாக இந்த அடிமையின் மீது உனக்குள்ள சக்தியை விட, உன் மீது அல்லாஹ்வுக்கு அதிக சக்தி உண்டு" என்று கூறினார்கள். நான் கூறினேன்: "இதற்குப் பிறகு நான் ஒருபோதும் அடிமையை அடிக்க மாட்டேன்."
அபூ மஸ்ஊத் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் எனது அடிமையை அடித்துக் கொண்டிருந்தபோது, எனக்குப் பின்னாலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: "அபூ மஸ்ஊத்! அறிந்துகொள்! நீ இவன் மீது கொண்டுள்ள சக்தியை விட, அல்லாஹ் உன் மீது அதிக சக்தி பெற்றவன்."
நான் திரும்பினேன்; அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள்.
நான் கூறினேன்: "அல்லாஹ்வின் தூதரே! நான் இவனை அல்லாஹ்வுக்காக விடுதலை செய்துவிட்டேன்."
அதற்கு அவர்கள் கூறினார்கள்: "நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால், நரகம் உன்னைச் சுட்டெரித்திருக்கும்; அல்லது நெருப்பு உன்னைத் தீண்டியிருக்கும்."