அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருவர் ஒருவரையொருவர் வசைபாடும்போது, (அவர்கள் கூறிய) வசைச்சொற்களின் பாவம் முதலில் ஆரம்பித்தவர் மீதே விழும், அநீதி இழைக்கப்பட்டவர் வரம்பு மீறாத வரையில்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருவர் ஒருவரையொருவர் ஏசிக் கொள்ளும்போது, அவர்கள் கூறியவற்றின் (பாவச்)சுமை, பாதிக்கப்பட்டவர் (பதிலுக்கு) வரம்பு மீறாத வரையில், அதைத் தொடங்கியவர் மீதே சாரும்.