அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யாரிடம் இந்த நான்கு (தீய) பண்புகள் இருக்கின்றனவோ, அவர் ஒரு கலப்படமற்ற நயவஞ்சகராக இருப்பார். மேலும், இந்த நான்கு பண்புகளில் ஒன்று யாரிடம் இருக்கிறதோ, அதை அவர் கைவிடும் வரை அவரிடம் நயவஞ்சகத்தின் ஒரு பண்பு இருக்கும்.
1. அவரிடம் ஒரு அமானிதம் ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வார்.
2. அவர் பேசும்போது பொய் சொல்வார்.
3. அவர் ஒரு உடன்படிக்கை செய்தால் துரோகம் இழைப்பார்.
4. அவர் வழக்காடினால் வரம்பு மீறி நடப்பார்."
حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا، أَوْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ أَرْبَعَةٍ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ، حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ .
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான்கு குணங்கள் எவனிடம் உள்ளனவோ அவன் (முழுமையான) நயவஞ்சகன் ஆவான். அல்லது அ(ந்த நான்கு குணங்க)ளில் ஏதேனும் ஒரு குணம் எவனிடம் உள்ளதோ, அவன் அதை விட்டுவிடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருக்கும். (அவை:) பேசினால் பொய் சொல்வான்; வாக்குறுதி அளித்தால் அதை மீறுவான்; உடன்படிக்கை செய்தால் துரோகம் செய்வான்; விவாதம் செய்தால் அக்கிரமம் செய்வான்."
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَرْبَعُ خِلاَلٍ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا مَنْ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا خَاصَمَ فَجَرَ، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا .
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான்கு குணங்கள் உள்ளன; அவை எவரிடம் இருக்கின்றனவோ அவர் கலப்படமற்ற நயவஞ்சகர் ஆவார். அவற்றில் ஒரு குணம் எவரிடம் இருக்கின்றதோ அவர் அதைக் கைவிடும் வரை அவரிடம் நயவஞ்சகத்தின் ஒரு குணம் இருக்கும். (அவை:) அவர் பேசினால் பொய் சொல்வார்; வாக்குறுதி அளித்தால் மாறு செய்வார்; ஒப்பந்தம் செய்தால் துரோகம் செய்வார்; விவாதம் செய்தால் (உண்மையிலிருந்து விலகி) வரம்பு மீறுவார்."