எங்களுக்கு, மீசையைக் கத்தரித்தல், நகங்களை வெட்டுதல், அக்குள் முடிகளைப் பிடுங்குதல், மர்ம உறுப்பு முடிகளை மழித்தல் ஆகியவற்றிற்காக, அவை நாற்பது இரவுகளுக்கு மேல் புறக்கணிக்கப்படக்கூடாது என்ற ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது மற்றும் மறைவிட முடிகளை அகற்றுவது ஆகியவற்றில், நாற்பது நாட்களுக்கு மேல் நாங்கள் அதை விட்டுவிடக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் காலக்கெடு நிர்ணயித்தார்கள்," ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள், "நாற்பது இரவுகள்" என்று கூறினார்கள்.