இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2809 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ،
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ الزَّرْعِ لاَ
تَزَالُ الرِّيحُ تُمِيلُهُ وَلاَ يَزَالُ الْمُؤْمِنُ يُصِيبُهُ الْبَلاَءُ وَمَثَلُ الْمُنَافِقِ كَمَثَلِ شَجَرَةِ الأَرْزِ لاَ تَهْتَزُّ
حَتَّى تَسْتَحْصِدَ ‏ ‏ ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு மூஃமினின் உவமை பயிரைப் போன்றதாகும். காற்று அதனைத் தொடர்ந்து சாய்த்துக் கொண்டேயிருக்கும். அவ்வாறே ஒரு மூஃமினுக்குத் தொடர்ந்து சோதனைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். ஒரு முனாஃபிக்கின் உவமை தேவதாரு மரத்தைப் போன்றதாகும். அது (சிறு அசைவுகளுக்கும்) அசைந்து கொடுப்பதில்லை, வேரோடு சாய்க்கப்படும் வரை (அல்லது வெட்டப்படும் வரை).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح