(பொருள்: அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவனுடைய கோபத்திலிருந்தும், அவனுடைய அடியார்களின் தீங்கிலிருந்தும், ஷைத்தான்களின் தீய தூண்டுதல்களிலிருந்தும், அவை (என்னிடம்) வருவதை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்).
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள், தங்கள் பிள்ளைகளில் விவரம் தெரிந்தவர்களுக்கு இதனைக் கற்பித்து வந்தார்கள்; மேலும், விவரம் தெரியாத பிள்ளைகளுக்கு இதனை எழுதி, அதை அவர்களின் கழுத்தில் தொங்கவிட்டு விடுவார்கள்.
ஹதீஸ் தரம் : 'வ கான அப்துல்லாஹ்' என்ற கூற்றைத் தவிர ஹஸன் (அல்பானி)