அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒவ்வொரு நபிக்கும் (அல்லாஹ்விடம்) ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு பிரார்த்தனை உண்டு. ஒவ்வொரு நபியும் தங்கள் பிரார்த்தனையை (இவ்வுலகிலேயே கேட்பதில்) அவசரப்பட்டுவிட்டனர். ஆனால் நான், என்னுடைய பிரார்த்தனையை மறுமை நாளில் என்னுடைய உம்மத்தினரின் பரிந்துரைக்காக (ஷஃபாஅத்) சேமித்து வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால், என்னுடைய உம்மத்தினரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கும் ஒவ்வொருவருக்கும் அது (நிச்சயமாகக்) கிடைக்கும்."