அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று (அடையாளங்கள்) வெளிப்பட்டுவிட்டால், அதற்கு முன் ஈமான் கொள்ளாதவருக்கோ அல்லது தனது ஈமானின் மூலம் நன்மையைச் சம்பாதிக்காதவருக்கோ (அதாவது, ஈமான் இருந்தும் நற்செயல்கள் செய்யாதிருந்தவருக்கோ) அவரின் ஈமான் பயனளிக்காது: (அவை) சூரியன் அது மறையும் இடத்திலிருந்து உதிப்பது, தஜ்ஜால் மற்றும் பூமியிலிருந்து வெளிப்படும் பிராணி."