முஃகீரா இப்னு ஷுஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நஜ்ரானுக்கு வந்தபோது, அவர்கள் என்னிடம், "நீங்கள் (குர்ஆனில்) 'யா உக்த ஹாரூன்' (ஹாரூனின் சகோதரியே!) என்று ஓதுகிறீர்கள். ஆனால், மூஸா (அலை) அவர்கள் ஈஸா (அலை) அவர்களுக்கு எவ்வளவோ காலத்திற்கு முன்பே இருந்தார்களே?" என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நிச்சயமாக அவர்கள், தங்களுக்கு முன்சென்ற நபிமார்கள் மற்றும் நல்லோர்களின் பெயர்களைக் கொண்டு (தங்கள் பிள்ளைகளுக்குப்) பெயர் சூட்டுபவர்களாக இருந்தனர்" என்று கூறினார்கள்.