حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقُولُ اللَّهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ذُخْرًا، بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ . ثُمَّ قَرَأَ {فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ}
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் கூறினான், 'என்னுடைய பக்தியுள்ள அடியார்களுக்காக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனித உள்ளமும் நினைத்துப் பார்த்திராத பொருட்களை நான் தயார் செய்து வைத்திருக்கிறேன். இவையெல்லாம் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவையன்றி, நீங்கள் கண்டவை யாவும் ஒன்றுமில்லை.'" பின்னர் அவர்கள் ஓதினார்கள்:-- 'அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியை (கண் குளிர்ச்சியை) எந்த ஆன்மாவும் அறியாது.' (32:17)
حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قَالَ اللَّهُ أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் கூறினான், "நான் என்னுடைய நல்லடியார்களுக்காக, எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனித உள்ளமும் நினைத்துக்கூட பார்த்திராத அத்தகைய சிறப்புமிக்கப் பொருட்களைத் தயார் செய்து வைத்திருக்கிறேன்.'""
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மேன்மையும் மகிமையும் மிக்க அல்லாஹ் கூறினான்: எனது நல்லடியார்களுக்காக நான் எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனித உள்ளத்திலும் தோன்றாத ஒன்றை தயாரித்துள்ளேன். அல்லாஹ்வின் வேதத்தில் இதற்கு அத்தாட்சி உள்ளது.
பின்னர் அவர் (ஸல்) ஓதினார்கள்: "அவர்கள் செய்தவற்றிற்கு கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சி என்னவென்று எந்த ஆன்மாவும் அறியாது". (அல்குர்ஆன் 32:17)