حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا كُنَّا نَدْعُوهُ إِلاَّ زَيْدَ ابْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ {ادْعُوهُمْ لآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ}.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விடுதலை செய்யப்பட்ட அடிமையும் (அவர்களால் தத்தெடுக்கப்பட்டவருமான) ஸைத் பின் ஹாரிஸா (ரழி) அவர்களை, “அவர்களை அவர்களின் தந்தையரின் பெயர்களைச் சொல்லி அழையுங்கள்; அதுவே அல்லாஹ்விடத்தில் மிகவும் நீதியானது” (அரபு: ادْعُوهُمْ لآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ - குர்ஆன் 33:5) என்ற குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் ‘ஸைத் பின் முஹம்மது’ என்றே அழைத்து வந்தோம்.
ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் தம் தந்தையார் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள்:
அவர்கள் (அப்துல்லாஹ் இப்னு உமர்) கூறுபவர்களாக இருந்தார்கள்: "(குர்ஆனின் பின்வரும்) வசனம் அருளப்படும் வரை, நாங்கள் ஸைத் இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களை 'ஸைத் இப்னு முஹம்மத்' என்றே அழைத்து வந்தோம்:
'அவர்களை அவர்களின் தந்தையர் பெயராலேயே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதியானது.'"