அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்-ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அஃராபி (அரபு நாடோடி கிராமவாசி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'ஸூர் (இறுதி நாளின் எக்காளம்) என்றால் என்ன?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'அது (அல்லாஹ்வின் கட்டளைப்படி) ஊதப்படும் ஒரு கொம்பு ஆகும்' என்று கூறினார்கள்.