இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2837ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَاللَّفْظُ لإِسْحَاقَ - قَالاَ أَخْبَرَنَا
عَبْدُ الرَّزَّاقِ، قَالَ قَالَ الثَّوْرِيُّ فَحَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، أَنَّ الأَغَرَّ، حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ،
وَأَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ يُنَادِي مُنَادٍ إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلاَ
تَسْقَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلاَ تَمُوتُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلاَ تَهْرَمُوا أَبَدًا وَإِنَّ
لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلاَ تَبْتَئِسُوا أَبَدًا ‏ ‏ ‏.‏ فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ ‏{‏ وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا
بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ‏}‏
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி), அபூ ஹுரைரா (ரழி) ஆகியோர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:

"(சொர்க்கத்தில்) ஓர் அழைப்பாளர் இவ்வாறு அழைப்பு விடுப்பார்: 'நிச்சயமாக உங்களுக்கு (நிலையான) ஆரோக்கியம் உண்டு; நீங்கள் ஒருபோதும் நோயுற மாட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு (நிலையான) வாழ்வு உண்டு; நீங்கள் ஒருபோதும் மரணிக்க மாட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு (நிலையான) இளமை உண்டு; நீங்கள் ஒருபோதும் முதுமையடைய மாட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு (நிலையான) இன்பம் உண்டு; நீங்கள் ஒருபோதும் துயருற மாட்டீர்கள்.'"

இதுவே கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் வாக்காகும்: {வனூதூ அன் தில்குமுல் ஜன்னது ஊரிஸ்துமூஹா பிமா குன்தும் தஃமலூன்} (இதன் பொருள்: "மேலும் அவர்களுக்கு அறிவிக்கப்படும்: இதுதான் சொர்க்கம். நீங்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்காக நீங்கள் இதை வாரிசாகப் பெற்றுள்ளீர்கள்"). (திருக்குர்ஆன் 7:43)

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح