அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அன்சாரிகளில் ஒருவருடன் ஒரு விருந்தினர் இரவு தங்கினார். அவரிடம் அவருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் (அன்றைய தினத்திற்கான) உணவைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அவர் தம் மனைவியிடம், "பிள்ளைகளைத் (தாலாட்டி) தூங்க வையுங்கள்; விளக்கையணையுங்கள்; உங்களிடம் உள்ளதை விருந்தினருக்குப் பரிமாறுங்கள்" என்று கூறினார். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது: *வ யுஃதிரூன அலா அன்ஃபுஸிஹிம் வலவ் கான பிஹிம் கஸாஸா* ("தங்களுக்கு வறுமை இருந்தபோதிலும், தங்களைவிட (பிறருக்கே) அவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்") (59:9).