حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. {يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ} قَالَ يَقُومُ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (இந்த வசனம் குறித்து) கூறினார்கள்: ""அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கு முன்னால் மனிதர்கள் அனைவரும் நிற்கும் நாள்,' (அந்த நாளில்) அவர்கள் தங்கள் காதுகளின் நடுப்பகுதி வரை தங்கள் வியர்வையில் மூழ்கியவர்களாக நிற்பார்கள்."
இப்னு உமர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் சமூகத்தில் மக்கள் நிற்கும்போது, அவர்களில் ஒவ்வொருவரும் தமது காதுகளில் பாதிவரை வியர்வையில் மூழ்கி நிற்பார்கள், மேலும், இப்னு முதன்னீ அவர்கள் அறிவித்த ஹதீஸில் "நாள்" என்ற சொல் குறிப்பிடப்படவில்லை.