ஹம்ஸா பின் அப்துல்லாஹ் அறிவித்தார்கள்:
என் தந்தை (அப்துல்லாஹ் (ரழி)) கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில், நாய்கள் (பள்ளிவாசல்களில்) சிறுநீர் கழிப்பதுண்டு; மேலும் (அவை) பள்ளிவாசல்களுக்குள் வந்து செல்வதுண்டு, அப்படியிருந்தும் அவர்கள் ஒருபோதும் அதன் மீது (நாயின் சிறுநீர் மீது) தண்ணீர் தெளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை."