وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ فِي ثَوْبٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ .
உமர் இப்னு அபூ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில் ஒரே ஆடையை அதன் இரு ஓரங்களையும் மாற்றிப் போட்டவர்களாக அணிந்து தொழுதுகொண்டிருந்ததை பார்த்தேன்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடை அணிந்து, அதன் இரு முனைகளையும் மாற்றிப் போட்டவர்களாக தொழுவதை கண்டேன். ஈஸா இப்னு ஹம்மாத் அவர்கள், "தம் தோள்கள் மீது (அதை) போட்டிருந்தார்கள்" என்று கூடுதலாகக் கூறினார்கள்.