அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈத் பெருநாள் அன்று வெளியே வரும்போதெல்லாம், தங்களுக்கு முன்னால் (தங்களது தொழுகைக்கு ஒரு சுத்ராவாக) ஒரு ஹர்பாவை ?? (ஒரு குட்டையான ஈட்டி) நட்டுவைக்குமாறு கட்டளையிடுவார்கள். அதன்பின், மக்கள் தங்களுக்குப் பின்னால் (அணிவகுத்து) நிற்க, அதை முன்னோக்கி அவர்கள் தொழுவார்கள். பயணத்தின்போதும் அவ்வாறே செய்வார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு, (அவர்களுடைய வழிமுறைகளைப் பின்பற்றிய) முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈத் பெருநாள் அன்று வெளியே சென்றபோது, ஒரு ஈட்டியை எடுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அது அவர்களுக்கு முன்னால் நாட்டப்பட்டது, மேலும் அவர்கள் அதனை முன்னோக்கித் தொழுதார்கள், மக்கள் அவர்களுக்குப் பின்னால் இருந்தார்கள். பயணத்திலும் அவர்கள் அவ்வாறே செய்தார்கள், இதனால்தான் அமீர்கள் அதனை எடுத்துச் சென்றார்கள்.