ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் "வல்லைலி இதா யக்ஷா" (எனும் அத்தியாயத்தை) ஓதுவார்கள்; அஸ்ர் தொழுகையிலும் அதைப்போன்றே (அதே நீளத்தில் அல்லது அதை ஒத்த அத்தியாயத்தை) ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையில் அதைவிட நீளமாக ஓதுவார்கள்.
ஜாபிர் பின் சமுரா (ரழி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் "வல்லைலி இதா யஃஷா" (அத்தியாயம் 92)வையும், அஸர் தொழுகையில் அதைப் போன்ற (அதே நீளமுள்ள) அத்தியாயத்தையும், ஸுப்ஹுத் தொழுகையில் அதைவிட நீண்ட (அத்தியாயங்களை)யும் ஓதுவார்கள்.