யஹ்யா இப்னு யஸீத் அல்ஹுனாயீ அறிவித்தார்கள்:
நான் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அல்லது மூன்று ஃபர்ஸக்குகள் (அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஃபா என்பவருக்கு இதில் ஐயம் இருந்தது) தொலைவு பயணம் செய்யும்போது, இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.