حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ رَأَيْتُ الأَسْوَدَ وَمَسْرُوقًا شَهِدَا عَلَى عَائِشَةَ قَالَتْ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْتِينِي فِي يَوْمٍ بَعْدَ الْعَصْرِ إِلاَّ صَلَّى رَكْعَتَيْنِ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் எப்போதெல்லாம் அஸர் தொழுகைக்குப் பிறகு என்னிடம் வருவார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
அஸ்வத் மற்றும் மஸ்ரூக் ஆகியோர் அறிவித்தார்கள்:
“ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என்பதற்கு நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்: ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடன் தங்கும் நாளில், என் வீட்டில் அந்த இரண்டு ரக்அத்களைத் தொழாமல் இருந்ததில்லை.’ அதாவது, அஸ்ருக்குப் பிந்தைய இரண்டு ரக்அத்கள்.”