அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் உளூச் செய்தவராக, கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காகத் தனது வீட்டிலிருந்து வெளியே செல்கிறாரோ, அவரது கூலி இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்பவரின் கூலியைப் போன்றதாகும். மேலும், யார் ளுஹா (முற்பகல்) தொழுகையை நிறைவேற்றுவதற்காக - அதைத்தவிர வேறு எதுவும் அவரை வெளியேற்றாத நிலையில் - வெளியே செல்கிறாரோ, அவரது கூலி உம்ராச் செய்பவரின் கூலியைப் போன்றதாகும். மேலும், ஒரு தொழுகைக்குப் பின் மற்றொரு தொழுகை அமைந்து, அவற்றுக்கு இடையில் வீணான பேச்சுக்கள் எதுவும் இல்லையென்றால், அது ‘இல்லிய்யூன்’ இல் பதிவு செய்யப்படும்."