இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

558சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ الْحَارِثِ، عَنِ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا إِلَى صَلاَةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُهُ كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ وَمَنْ خَرَجَ إِلَى تَسْبِيحِ الضُّحَى لاَ يُنْصِبُهُ إِلاَّ إِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِ الْمُعْتَمِرِ وَصَلاَةٌ عَلَى أَثَرِ صَلاَةٍ لاَ لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ ‏ ‏ ‏.‏
அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் உளூச் செய்தவராக, கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காகத் தனது வீட்டிலிருந்து வெளியே செல்கிறாரோ, அவரது கூலி இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்பவரின் கூலியைப் போன்றதாகும். மேலும், யார் ளுஹா (முற்பகல்) தொழுகையை நிறைவேற்றுவதற்காக - அதைத்தவிர வேறு எதுவும் அவரை வெளியேற்றாத நிலையில் - வெளியே செல்கிறாரோ, அவரது கூலி உம்ராச் செய்பவரின் கூலியைப் போன்றதாகும். மேலும், ஒரு தொழுகைக்குப் பின் மற்றொரு தொழுகை அமைந்து, அவற்றுக்கு இடையில் வீணான பேச்சுக்கள் எதுவும் இல்லையென்றால், அது ‘இல்லிய்யூன்’ இல் பதிவு செய்யப்படும்."

ஹதீஸ் தரம் : ஹஸன் (அல்-அல்பானீ)
حسن (الألباني)