இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2021ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ لَيْلَةَ الْقَدْرِ فِي تَاسِعَةٍ تَبْقَى، فِي سَابِعَةٍ تَبْقَى، فِي خَامِسَةٍ تَبْقَى ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்; (ரமலான் மாதம் முடிய) ஒன்பது இரவுகள் எஞ்சியிருக்கும் இரவில், ஏழு இரவுகள் எஞ்சியிருக்கும் இரவில், ஐந்து இரவுகள் எஞ்சியிருக்கும் இரவில் (அதைத் தேடுங்கள்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح