இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2732 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ سَرْوَانَ،
الْمُعَلِّمُ حَدَّثَنِي طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ، قَالَ حَدَّثَتْنِي أُمُّ الدَّرْدَاءِ، قَالَتْ حَدَّثَنِي سَيِّدِي،
أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ
الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ ‏ ‏ ‏.‏
உம்மு தர்தா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

என் கணவர் (அபு தர்தா (ரழி) அவர்கள்) தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:

யார் தன் சகோதரருக்காக அவர் இல்லாதபோது (மறைவில்) பிரார்த்திக்கிறாரோ, இறைவனிடம் அந்தப் பிரார்த்தனையைக் கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்ட வானவர், 'ஆமீன், உனக்கும் அவ்வாறே' எனக் கூறுகிறார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح