இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

999ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ، أَنَّهَا أَعْتَقَتْ وَلِيدَةً فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ لَوْ أَعْطَيْتِهَا أَخْوَالَكِ كَانَ أَعْظَمَ لأَجْرِكِ ‏ ‏ ‏.‏
மைமூனா பின்த் ஹாரித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஒரு அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டு, அதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் அவளை உங்கள் தாய்மாமன்களுக்குக் கொடுத்திருந்தால், உங்களுக்கு மிகப் பெரிய நற்கூலி கிடைத்திருக்கும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح