அல்-ஹசன் அவர்கள் அறிவித்ததாவது:
மஃகில் இப்னு யசார் (ரழி) அவர்களின் சகோதரியை, அவருடைய கணவர் விவாகரத்து செய்திருந்தார். அப்பெண் தன்னுடைய 'இத்தா'வின் காலத்தை பூர்த்தி செய்யும் வரை, அவருடைய கணவர் அவரை (மீண்டும் மணமுடிக்காமல்) விட்டுவிட்டார். பின்னர் (அப்பெண்ணின் முன்னாள்) கணவர் அவளை (மீண்டும் மணமுடிக்க) பெண் கேட்டார். ஆனால் மஃகில் (அப்பெண்ணின் பாதுகாவலராக) அதற்கு மறுத்துவிட்டார். எனவே, "{அப்பெண்கள் தங்கள் கணவர்களை (மீண்டும்) மணந்துகொள்வதைத் தடுக்காதீர்கள்}" எனும் இறைவசனம் (2:232) அருளப்பட்டது.