அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஹுனைன் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்தாஸ் பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார்கள்; அவர்கள் எதிரிகளைச் சந்தித்து, அவர்களுடன் போரிட்டு அவர்களை வெற்றி கொண்டார்கள். அவர்களிடமிருந்து (பெண்களைக்) கைதிகளாகப் பிடித்தார்கள்.
அப்பெண்களின் கணவர்கள் இணைவைப்பாளர்களாக இருந்த காரணத்தால், போர்க் கைதிகளான அப்பெண்களுடன் தாம்பத்திய உறவு கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் (பாவமாகக் கருதித்) தயங்கினார்கள்.
ஆகவே, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் அது குறித்துப் பின்வருமாறு இறக்கினான்: