இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5265ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَلَّقَ رَجُلٌ امْرَأَتَهُ فَتَزَوَّجَتْ زَوْجًا غَيْرَهُ فَطَلَّقَهَا، وَكَانَتْ مَعَهُ مِثْلُ الْهُدْبَةِ فَلَمْ تَصِلْ مِنْهُ إِلَى شَىْءٍ تُرِيدُهُ، فَلَمْ يَلْبَثْ أَنْ طَلَّقَهَا فَأَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ زَوْجِي طَلَّقَنِي، وَإِنِّي تَزَوَّجْتُ زَوْجًا غَيْرَهُ فَدَخَلَ بِي، وَلَمْ يَكُنْ مَعَهُ إِلاَّ مِثْلُ الْهُدْبَةِ فَلَمْ يَقْرَبْنِي إِلاَّ هَنَةً وَاحِدَةً، لَمْ يَصِلْ مِنِّي إِلَى شَىْءٍ، فَأَحِلُّ لِزَوْجِي الأَوَّلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ تَحِلِّينَ لِزَوْجِكِ الأَوَّلِ حَتَّى يَذُوقَ الآخَرُ عُسَيْلَتَكِ، وَتَذُوقِي عُسَيْلَتَهُ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் தம் மனைவியை விவாகரத்து செய்தார். பிறகு அவள் வேறொரு கணவரை மணமுடித்தார். ஆனால், அவரிடம் ஆடையின் ஓரத்தைப் போன்று (தொங்கிக் கொண்டு) இருப்பதைத் தவிர வேறேதுவும் இருக்கவில்லை. அவள் விரும்பிய எதனையும் அவரிடமிருந்து அடைய முடியவில்லை. ஆகவே, அவர் அவளை விவாகரத்து செய்ய அதிக நாட்கள் ஆகவில்லை. பிறகு அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் (முதல்) கணவர் என்னை விவாகரத்து செய்தார். நான் வேறொருவரை மணம் முடித்தேன். அவர் என்னுடன் (தனிமையில்) கூடினார். ஆனால் அவரிடம் ஆடையின் ஓரத்தைப் போன்று இருப்பதைத் தவிர வேறேதுவும் இல்லை. அவர் என்னை (பெயரளவில்) ஒரு முறை தவிர நெருங்கவில்லை. அவரிடமிருந்து எதையும் நான் அடையவில்லை. இந்நிலையில், நான் என் முதல் கணவருக்கு (மீண்டும் மணம் செய்ய) ஆகுமாவேனா?" என்று கேட்டாள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(கூடாது;) அந்த (இரண்டாவது) கணவர் உனது தேனைச் சுவைக்கும் வரையிலும், நீ அவருடைய தேனைச் சுவைக்கும் வரையிலும் (முதல் கணவருக்கு நீ ஆகுமாக மாட்டாய்)" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1433 fஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَلَّقَ رَجُلٌ امْرَأَتَهُ ثَلاَثًا فَتَزَوَّجَهَا رَجُلٌ ثُمَّ طَلَّقَهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا فَأَرَادَ زَوْجُهَا الأَوَّلُ أَنْ يَتَزَوَّجَهَا فَسُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ ‏ ‏ لاَ حَتَّى يَذُوقَ الآخِرُ مِنْ عُسَيْلَتِهَا مَا ذَاقَ الأَوَّلُ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் கூறி விவாகரத்து செய்தார்; பின்னர் வேறொருவர் அவளை மணந்துகொண்டார், அவரும் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்ளாமலேயே அவளை விவாகரத்து செய்துவிட்டார். அதன்பிறகு அவளுடைய முதல் கணவர் அவளை மீண்டும் திருமணம் செய்ய விரும்பினார். இத்தகைய ஒரு நிகழ்வைப் பற்றித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர்கள் கூறினார்கள்: இல்லை, முதலாவவர் அவளின் இனிமையைச் சுவைத்தது போல், இரண்டாமவரும் அவளின் இனிமையைச் சுவைக்கும் வரை (அது கூடாது).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح