حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، وَسُلَيْمَانُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ،. قَالَ وَحَدَّثَنِي وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ ـ أَوْ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ـ أَىُّ الذَّنْبِ عِنْدَ اللَّهِ أَكْبَرُ قَالَ " أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهْوَ خَلَقَكَ ". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ " ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ " أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ ". قَالَ وَنَزَلَتْ هَذِهِ الآيَةُ تَصْدِيقًا لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلَا يَزْنُونَ}
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் (அல்லது வேறொருவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவம் எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உன்னைப் படைத்தவன் அல்லாஹ்வாக இருக்க, அவனுக்கு நீ இணையை ஏற்படுத்துவது" என்று கூறினார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உன்னுடன் உண்பான் என்று அஞ்சி, உன் பிள்ளையை நீ கொல்வது" என்றார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது" என்றார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது:
(இதன் பொருள்:) "அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்க மாட்டார்கள்; அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் நியாயமான காரணமின்றி கொல்ல மாட்டார்கள்; மேலும் விபச்சாரம் செய்ய மாட்டார்கள்." (25:68)
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான், "அல்லாஹ்வின் தூதரே! பாவங்களில் மிகப்பெரியது எது?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "உன்னைப் படைத்தவன் அல்லாஹ்வாக இருக்க, அவனுக்கு நீ இணையை ஏற்படுத்துவதாகும்" என்று கூறினார்கள்.
"பிறகு எது?" என்று (நான்) கேட்டேன்.
அதற்கு அவர்கள், "உன்னுடன் உண்பான் என்று அஞ்சி, உன் பிள்ளையை நீ கொல்வதாகும்" என்று கூறினார்கள்.
"பிறகு எது?" என்று (நான்) கேட்டேன்.
அதற்கு அவர்கள், "உன் அண்டை வீ்ட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வதாகும்" என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களின் கூற்றை உண்மைப்படுத்தும் விதமாக அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளினான்:
*'வல்லதீன லா யத்ஊன மஅல்லாஹி இலாஹன் ஆகர'*
(இதன் பொருள்: "மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்")
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவம் எது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன்னை அல்லாஹ்வே படைத்திருக்க, அவனுக்கு நீ இணையை ஏற்படுத்துவதாகும்" என்று கூறினார்கள்.
"பிறகு எது?" என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள், "உன்னுடன் உண்பான் என்று (பயந்து) உன் பிள்ளையை நீ கொல்வதாகும்" என்று கூறினார்கள்.
"பிறகு எது?" என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள், "உன் அண்டை வீட்டார் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வதாகும்" என்று கூறினார்கள்.
ஆகவே, அல்லாஹ் இதை உண்மைப்படுத்தி (பின்வரும் வசனத்தை) அருளினான்:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவம் எது?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணையை ஏற்படுத்துவது" என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "பிறகு எது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன்னுடன் உண்பான் என்பதற்காக உன் பிள்ளையைக் கொல்வது" என்று கூறினார்கள். அம்மனிதர், "பிறகு எது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது" என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ் இதை மெய்ப்பிக்கும் விதமாக பின்வரும் வசனத்தை அருளினான்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உன்னைப் படைத்தவன் அவனாக இருக்க, அவனுக்கு நீ இணை வைப்பதாகும்" என்று பதிலளித்தார்கள்.
நான், "நிச்சயமாக இது மிகப் பெரியதுதான்" என்று கூறினேன். பிறகு, "அடுத்தது எது?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "உன்னுடன் உண்பான் என்ற அச்சத்தில் உன் பிள்ளையை நீ கொல்வது" என்றார்கள்.
பிறகு, "அடுத்தது எது?" என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர்கள், "பிறகு, உன் அண்டை வீட்டுக்காரரின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது" என்றார்கள்.
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய பாவம் எது?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன்னைப் படைத்தவன் அல்லாஹ்வாக இருக்க, அவனுக்கு நீ நிகராக (வேறொன்றை) அழைப்பதாகும்" என்று பதிலளித்தார்கள். அவர், "பிறகு எது?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவன் உன்னுடன் உண்பான் என்ற அச்சத்தால் உன் குழந்தையை நீ கொல்வதாகும்" என்று பதிலளித்தார்கள். அவர், "பிறகு எது?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வதாகும்" என்று பதிலளித்தார்கள்.
பிறகு, வல்லமையும் கண்ணியமும் மிக்க அல்லாஹ் இதனை உண்மைப்படுத்தி (பின்வரும் வசனத்தை) அருளினான்: