கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து, பகல் நேரத்தில், ளுஹா வேளையிலன்றி (வேறு நேரத்தில்) திரும்பி வரமாட்டார்கள். மேலும், அவர்கள் (பயணத்திலிருந்து) வந்து சேர்ந்ததும், முதலில் பள்ளிவாசலுக்குச் செல்வார்கள். அதில் இரண்டு ரக்அத்கள் தொழுத பின்னர், அதிலேயே அமர்வார்கள்.