அபூபுர்தா (ரழி) என்றழைக்கப்படும் என்னுடைய மாமா ஒருவர், (ஈத்) தொழுகைக்கு முன் தம்முடைய குர்பானியை அறுத்துவிட்டார்.
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், "உங்களுடைய ஆடு (இறைச்சிக்கான) ஆடுதான்; (குர்பானி அல்ல)" என்று கூறினார்கள்.
அவர், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! என்னிடம் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு வெள்ளாட்டுக் குட்டி (ஜதஆ) உள்ளது" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "அதை (குர்பானியாக) அறுப்பீராக! ஆனால் உங்களைத் தவிர வேறு எவருக்கும் அது (குர்பானியாகச்) செல்லுபடியாகாது" என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், "யார் (ஈத்) தொழுகைக்கு முன் அறுக்கிறாரோ, அவர் தமக்காகவே அறுக்கிறார்; யார் தொழுகைக்குப் பிறகு அறுக்கிறாரோ, அவர் தம்முடைய குர்பானியை முழுமைப்படுத்திவிட்டார்; மேலும் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றினார்" என்று கூறினார்கள்.
என்னுடைய மாமா அபூ புர்தா (ரழி) ('ஈத்) தொழுகைக்கு முன்பு தமது பிராணியை அறுத்துப் பலியிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: அது (சாதாரண) இறைச்சிக்காக அறுக்கப்பட்ட ஓர் ஆடு (அழ்ஹா நாளில் கொடுக்கப்படும் பலியாகாது). அவர் (அபூ புர்தா (ரழி)) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓர் ஆண்டு நிரம்பிய வெள்ளாட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அப்போது அவர்கள் (நபிகள் நாயகம் (ஸல்)) கூறினார்கள்: அதை அறுத்துப் பலியிடுங்கள், ஆனால், அது உங்களைத் தவிர வேறு எவருக்கும் (பலியாக) செல்லுபடியாகாது. பின்னர் கூறினார்கள்: யார் ('ஈத்) தொழுகைக்கு முன்பு (பிராணியை) அறுத்துப் பலியிட்டாரோ, அவர் உண்மையில் தமக்காகவே அதை அறுத்தவராவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுத்துப் பலியிட்டாரோ, அவருடைய பலியிடும் கிரியை பூர்த்தியாகிவிட்டது மேலும், அவர் முஸ்லிம்களின் மார்க்க நடைமுறையைப் பின்பற்றிவிட்டார்.