ஸவ்பான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது குர்பானிப் பிராணியை அறுத்தார்கள். பிறகு, "ஸவ்பானே! இதன் இறைச்சியைப் பதப்படுத்துவீராக (பாதுகாக்கும் விதமாக சமைப்பீராக அல்லது உலர்த்துவீராக)!" என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து சேரும் வரை அதிலிருந்து நான் அவர்களுக்குத் தொடர்ந்து உணவளித்துக் கொண்டிருந்தேன்.