அபூ தாவூத் நூலில், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
"யாரேனும் ஒரு நேர்ச்சையை மேற்கொண்டு, அதை பெயரிட்டுக் குறிப்பிடவில்லையென்றால், அதன் பரிகாரம் ஒரு சத்தியத்திற்கான பரிகாரமேயாகும். யாரேனும் (அல்லாஹ்வுக்கு) மாறுசெய்யும் ஒரு செயலைச் செய்வதாக நேர்ச்சை செய்தால், அதன் பரிகாரம் ஒரு சத்தியத்திற்கான பரிகாரமேயாகும். யாரேனும் தன்னால் நிறைவேற்ற இயலாத ஒரு காரியத்திற்காக நேர்ச்சை செய்தால், அதன் பரிகாரம் ஒரு சத்தியத்திற்கான பரிகாரமேயாகும்."
அதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரப்பூர்வமானது. ஆயினும், இது மவ்கூஃப் (ஒரு நபித்தோழரின் கூற்று) என்பதே மிக வலுவான கருத்து என ஹதீஸ் கலை அறிஞர்கள் கருதுகின்றனர்.